நீட் தேர்வு ஆள் மாறாட்டம்: உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் பணியிடை நீக்கம்!

 

நீட் தேர்வு ஆள் மாறாட்டம்: உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் பணியிடை நீக்கம்!

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யாவும் அவரது தந்தை வெங்கடேஷும் நேற்று முன் தினம் கைது செய்யப் பட்டனர்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யாவும் அவரது தந்தை வெங்கடேஷும் நேற்று முன் தினம் கைது செய்யப் பட்டனர். அதன் பின், அவர்களை 15 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைக்குமாறு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. இவர்களிடம், சிபிசிஐடி காவல் துறையினர் கடும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Udit surya

உதித் சூர்யாவிற்கே மற்றொருவர் தான் நீட் தேர்வில் அவருக்காக தேர்வெழுத போகிறார் என்று தெரியாத அளவிற்கு, நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன். 

இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவ மனையில் அரசு மருத்துவராக பணியாற்றி வந்த வெங்கடேஷை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.