நீங்க நினைக்கிறமாதிரி ஒன்னும் இல்லை… துரைமுருகன் மகன் போட்ட ட்வீட்டால் தி.மு.க-வினர் நிம்மதி!
தி.மு.க பொருளாளர் துரைமுருகன் உடல் நலக் குறைவு காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமாக உள்ளது என்று சமூக ஊடகங்களில் வதந்தி வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் துரைமுருகன் உடல்நலம் பற்றி அவரது மகன் கதிர் ஆனந்த் ட்வீட் செய்துள்ளார்.
துரைமுருகன் உடல்நலம் பற்றி அவரது மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் வெளியிட்ட ட்வீட்டால் தி.மு.க-வினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
தி.மு.க பொருளாளர் துரைமுருகன் உடல் நலக் குறைவு காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமாக உள்ளது என்று சமூக ஊடகங்களில் வதந்தி வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் துரைமுருகன் உடல்நலம் பற்றி அவரது மகன் கதிர் ஆனந்த் ட்வீட் செய்துள்ளார்.
— D.M.KathirAnand (@dmkathiranand) February 21, 2020
அதில், “அனைவருக்கும் வணக்கம். வலைத்தளங்களில் என் தந்தை திரு துரை முருகன் அவர்கள் மிகவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கிறது. அவர் பூரண நலத்தோடு வழக்கமாக நடைபெறக்கூடிய மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பரிசோதனை எல்லாம் நிறைவு பெற்றவுடன் இன்று இரவு அல்லது நாளை காலை வீடு திரும்புவார் என்று உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். துரைமுருகன் உடல் நலம் பற்றி கதிர் ஆனந்த் அப்டேட் செய்திருப்பது தி.மு.க-வினருக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.