நில தகராறில் குழந்தையின் நாக்கை அறுத்த பெண்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

நில தகராறில் குழந்தையின் நாக்கை அறுத்த பெண்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

நிலப் பிரச்னை காரணமாகக் குழந்தையின் நாக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: நிலப் பிரச்னை காரணமாகக் குழந்தையின் நாக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம்,  நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவருக்கு நில தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

child

இந்நிலையில், விஜயராகவனின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகன் திக்சாந்த் வீட்டருகே விளையாண்டுகொண்டிருந்த பொழுது மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்ற லட்சுமி, திக்சாந்தின் நாக்கை அறுத்துள்ளார். 

 

boy

இதையடுத்து பலத்த காயத்துடன் குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர், தற்போது  திக்சாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து புகார் அளித்தும், லட்சுமி மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என திக்சாந்தின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளதோடு காவல்துறையின் இச்செயல் மிகுந்த மனக்கவலையை ஏற்படுத்துவதாக வேதனைத் தெரிவித்துள்ளனர்.