நிலுவைத் தொகை வழங்கும்படி மோடியிடம் கோரிக்கை – ம்மதா

 

நிலுவைத் தொகை வழங்கும்படி மோடியிடம் கோரிக்கை – ம்மதா

 

பிரதமர் மோடியை டெல்லியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சந்தித்தார்.மேற்கு வங்க மாநிலத்தின் நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அம்மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக தற்போது சந்தித்தார். மோடி மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்ததற்கு பின் முதல் முறையாக மம்தாவை சந்திக்கிறார்.பூங்கொத்து கொடுத்து வரவேறதார்

மாநில வளர்ச்சிக்கான நிதி, பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா போன்ற பொது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ – ஆல் தேடப்பட்டு வரும் கொல்கத்தாவின் முன்னாள் ஆணையரும், சிஐடி கூடுதல் தலைமை இயக்குநருமான ராஜீவ் குமாருக்கு ஆதரவாக முன்பு மம்தா தர்ணா போராட்டத்தில்  ஈடுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இது குறித்து பிரதமரிடம் மம்தா உதவி கோருவார் என்று அரசியல் வட்டாரங்கள் விமர்சித்து வருகின்றனர்.