நிலவை நெருங்கியது சந்திரயான் 2! சாதித்த இஸ்ரோ

 

நிலவை நெருங்கியது சந்திரயான் 2! சாதித்த இஸ்ரோ

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. 

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. 

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.

chandrayan

இந்நிலையில், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நான்காவது முறையாக சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது. இன்னும் ஒருமுறை சுற்றுவட்டப் பாதை மாற்றியமைக்கப்பட்ட பிறகு நிலவில் சந்திரயான் தரையிறங்கும். செப்டம்பர் 7ஆம் தேதி, சந்திரயான் 2 நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் நிலவில் லேண்டர் மற்றும் ரோவர் இறங்கி நிலவிலுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.