நிலச்சரிவில் சிக்கிய மஞ்சு வாரியாரை காப்பாற்றிய முதலமைச்சர்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ள நடிகை மஞ்சு வாரியர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ள நடிகை மஞ்சு வாரியர். அதைத்தொடர்ந்து மலையாள படத்தில் மஞ்சு வாரியர் கமிட்டாக நடித்து வருகிறார். இயக்குநர் சனல் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக டெல்லி, இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு பாதிப்பு அடைந்தது.
இந்த நிலையில் மஞ்சு வாரியர் மட்டும் படக்குழுவினர் கனமழையால் அங்கு சிக்கித் தவித்து வந்துள்ளனர். நேற்று சேட்டிலைட் தொலைப்பேசி மூலம் தனது சகோதரரும், நடிகருமான மதுவிற்கு போன் செய்து அங்குள்ள சூழ்நிலை குறித்து கூறியுள்ளார்.
இதனையடுத்து மதுவாரியர் மத்திய அமைச்சர் முரளிதரன் அவர்களுடன் பேசி மஞ்சுவாரியர் உள்பட வெள்ளத்தில் சிக்கிய படக்குழுவினர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார். உடனே மத்திய அமைச்சர், இமாச்சல பிரதேச முதல்வரிடம் பேசிய மஞ்சுவாரியர் உள்படப் படக்குழுவினரைத் தேடி கண்டு பிடித்து பத்திரமாக மணலி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.