நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ரோபோ – கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு

 

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ரோபோ – கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரோபோ நிறுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரோபோ நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் மிகவும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டு வருகிறது. உலகளவில் இதுவரை 40,000-க்கும் அதிகமான மக்களை இந்த கொடிய வைரஸ் பாதித்து உள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரோபோ நிறுத்தப்பட்டுள்ளது. இது அங்கு வரும் மக்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ttn

5 அடி உயரம் கொண்ட இந்த தானியங்கி ரோபோவின் உடலில் பொருத்தப்பட்டுள்ள ஐபேட் மூலம், கொரானா வைரஸ் அறிகுறிகள் மற்றும் அந்த வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ரோபோவுடன் கலந்து உரையாடி நிவர்த்தி செய்து கொள்ளலாம். பென்சில்வேனியாவில் வணிக நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் பொருட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.