நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து : 9 பேர் பலி !

 

நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து : 9 பேர் பலி !

சிதி என்ற ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து இன்று காலை 6 மணிக்கு லாரி மீது மோதியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம்  உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. இதனால், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டம், குத் சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அம்மாவட்டத்தில் சிதி என்ற ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து இன்று காலை 6 மணிக்கு லாரி மீது மோதியுள்ளது. பேருந்து லாரி மீது வேகமாக மோதியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி அதிலிருந்த 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ttn

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். பேருந்து வேகத்தின் காரணமாக லாரி மீது மோதவில்லை. கடும் பனிப்பொழிவே இதற்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.