நாளை முதல் சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு: சென்னை மாநகராட்சி

 

நாளை முதல் சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு: சென்னை மாநகராட்சி

இன்று ஒரே  நாளில்  தமிழகத்தில் 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2,526 ஆக உயர்ந்துள்ளது.  அத்துடன்  கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே  நாளில்  தமிழகத்தில் 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2,526 ஆக உயர்ந்துள்ளது.  அத்துடன்  கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 176 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதன்மூலம் சென்னையில் மட்டும் 1082 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. 

Lockdown

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 7 பகுதிகளில் கடந்த 28 நாட்களாக புதிதாக பாதிப்பு இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 5வது மண்டலம் – மதுரவாசல் தெரு, டேவிட்சன் தெரு, ரதராஜன்பேட்டை(சூளைமேடு), வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை) எல்லையம்மன் கோயில் தெரு(கோட்டூர்புரம்) நேரு தெரு (கல்குட்டை-பெருங்குடி) எம்.ஜி.ஆர். நகர், ( பனையூர் -சென்னை) ஆகிய பகுதிகளில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் இந்த இடங்களில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.