நாளை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் ரத்து

 

நாளை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டாங்குளத்தூர் மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள வழித்தடங்களில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 .20 மணி முதல் 1 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் 10 மின்சார ரயில்கள் இயங்காது என தெரிவித்துள்ளது. 

Local train

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரங்கள்:

சென்னை கடற்கரையிலிருந்து காலை 9 .32 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் வண்டி கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டுக்கு செல்லாது

10 மணிக்கு சென்னை கடற்கைரையிலிருந்து புறப்படும் செங்கல்பட்டு வண்டி காட்டாங்குளத்தூர் – செங்கல்பட்டுக்கு செல்லாது

11 மணிக்கு புறப்படும் வண்டி கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டுக்கு செல்லாது

அதே போல் 11 . 48 மணிக்கு புறப்படும் வண்டி காட்டாங்குளத்தூர் – செங்கல்பட்டுக்கு செல்லாது

Electric Train

காலை 10 . 30 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கும்மிடுப்பூண்டி வரை செல்லும் மின் தொடர் வண்டி செங்கல்பட்டு – காட்டாங்குளத்தூர் நிலையங்களுக்குள் வந்து செல்லாது.

11 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை செல்லும் வண்டி செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி நிலையங்களுக்கு வந்து செல்லாது.

11 . 30 மணிக்கு புறப்படும் வண்டி, செங்கல்பட்டு – காட்டாங்குளத்தூர் நிலையங்களுக்குள் வந்து செல்லாது.

11 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து வழக்கம் போல புறப்படும் வண்டியும் மற்றும் 1 மணி வண்டியும் செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரிக்கு அடுத்த ரயில் நிலையங்களிலிருந்துக்கு புறப்படும்.