நாமக்கல் திமுக நிர்வாகி தற்கொலை! அரசியல் அழுத்தம் காரணமா?
Aug 27, 2019, 19:15 IST1566913546000
நாமக்கல்லில் திமுக மேற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கப்பள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆனந்த் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் நாமக்கலில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மனைவி வெளியூர் சென்றிருந்த நிலையில் பண்ணை வீட்டில் தனியாக இருந்த ஆனந்த் தான், வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மன அழுத்ததால் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.