‘நான் ஸ்பிளென்டர் பைக் மட்டும் தான் திருடுவேன்’ : குறிவைத்து ஆட்டையைப் போட்ட இளைஞர் கைது !

 

‘நான் ஸ்பிளென்டர் பைக் மட்டும் தான் திருடுவேன்’ : குறிவைத்து ஆட்டையைப் போட்ட இளைஞர் கைது !

மயிலாடுதுறையில் தொடர்ந்து பைக்குகள் காணாமல் போவதாகக் காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்துள்ளன.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தொடர்ந்து பைக்குகள் காணாமல் போவதாகக் காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்துள்ளன. இதனால், வாகன திருட்டைக் கண்டு பிடிப்பதற்காகத் தனிப்படை அமைத்து காவலர்கள் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை காவல் துறையினர் சித்தர் காடு என்னும் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

staton

அப்போது அந்த வழியே வந்த இளைஞரை வழிமறித்து வாகன உரிமங்களைக் கேட்டுள்ளனர். அந்த இளைஞர் ஓட்டி வந்ததே திருட்டு பைக். அவனிடம் எங்கிருந்து உரிய ஆவணங்கள் இருக்கும். காவலர்கள் ஆவணங்களைக் கேட்டதும் அந்த இளைஞர் பதறிப் போய், சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்துள்ளார். இளைஞர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

bike

அதில் அவர் பெருந்தோட்டம் என்னும் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்றும் மயிலாடுதுறை மற்றும் பெரம்பலூர் பகுதியில் காணாமல் போன பைக்குகளை அவர் தான் திருடினார் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் நான் ஸ்பிளென்டர் பைக் மட்டும் தான் திருடுவேன் என்றும் ஏனெனில் அதனைத் தான் கள்ளச்சாவி கொண்டு எளிதாகத் திறக்க முடியும். அதனை விற்றால் நல்ல விலைக்குப் போகும் என்றும் தெரிவித்துள்ளார்.

sundhar

மேலும், அப்பகுதிகளில் திருடிய 12 ஸ்பிளென்டர் பைக்கை  சித்தர் காடு என்னும் பகுதியில் உள்ள ஆற்றங்கரை ஓரமாகப் பதுக்கி வைத்திருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அனைத்து பைக்குகளையும் மீட்டனர்.