நான் பேசியது சரித்திர உண்மையே…! முடிஞ்சத பாத்துகோங்க…  கெத்து கமல்ஹாசன்

 

நான் பேசியது சரித்திர உண்மையே…! முடிஞ்சத பாத்துகோங்க…  கெத்து கமல்ஹாசன்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மைதான் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மைதான் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் ஒரு முறை கூறியதை பல முறை ஊடகங்கள் ஒளிப்பரப்பினர். நான் கூறியது சரித்திர உண்மையே. அரவக்குறிச்சியில் நான் பேசியதை முழுமையாக கேட்காமல் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

நான் பேசியதற்கு கோபப்படுகின்றனர்.  என்மீது குற்றம் என்றால் என் உரையை பாதி ஒளிபரப்பிய ஊடகங்கள் மீதும் குற்றம்தான். மத கலவரத்தை தூண்டியது போல பேசியதை ஊடகத்தால் காட்ட முடியுமா?  மத கலவரத்தை தூண்டியதாக குற்றஞ்சாட்டுவது வருத்தமளிக்கிறது. மத செருக்கு ஜாதி செருக்கு எல்லாம் எப்போதும் வெல்லாது. அனைத்து மதங்களுக்கும் சமமானவன் நான். என் குடும்பமும் இந்து குடும்பம் தான். இந்து தீவிரவாதி என்ற எனது நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என பேசினார்.