நானும் ரவுடிதான் என்பது போல் ஸ்டாலின் செயல்படுகிறார்: ஜெயக்குமார் அதிரடி

 

நானும் ரவுடிதான்  என்பது போல் ஸ்டாலின் செயல்படுகிறார்: ஜெயக்குமார் அதிரடி

மு.க.ஸ்டாலின் நானும் ரவுடிதான் என்பது போல் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்

சென்னை: மு.க.ஸ்டாலின் நானும் ரவுடிதான் என்பது போல் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை எழும்பூரில் இருக்கும் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவிற்கு அரசியல் பண்பாடும் நாகரீகமும் கிடையாது.

திமுக பதவி வெறியும் ஆதங்கத்தோடும் இருப்பது ஸ்டாலினின் செயல்பாட்டிலேயே தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் ஏதோ நானும் ரவுடிதான் என்பது போல் செயல்படுகிறார். திமுக ஆட்சியில்தான் பல்வேறு ஊழல்கள் நடந்தன என்ற வரலாற்று உண்மையை அவர்கள் ஒருபோதும் மறந்துவிட கூடாது என்றார்.