நாட்டை காப்பாற்ற முடியாது: எம்.பி கனிமொழி

 

நாட்டை காப்பாற்ற முடியாது: எம்.பி கனிமொழி

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.

நெல்லை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.

சமத்துவ சுடரொளி தந்தை பெரியாரின் 140-வது ஆண்டு விழாவையொட்டி பாளை நூற்றாண்டு மண்டபம் முன்பு மக்கள் கலை விழா நடந்தது. விழாவில் கனிமொழி எம்.பி., விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சத்தியராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கனிமொழி எம்.பி பேசுகையில், தந்தை பெரியார் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்க வேண்டும் என்று கூறி வந்தார். அவருடைய கொள்கை திமுக ஆட்சியில் சட்டமாக கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆனால் இது தொடர்பாக இதுவரை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவில்லை. 10,000 ஆயிரம் கிளைகள் இருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு தற்போது 57,000 கிளைகள் இருக்கின்றன.

முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமிய மக்களிடையே பிளவை ஏற்படுத்தி விட்டனர். இந்த 5 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார்.