‘நாடோடிகள் 2 ‘ படத்திற்குப் பிறகு திருநங்கைகள் மீது பெரிய மரியாதை வரும்: நடிகர் சசிகுமார் நம்பிக்கை! !

 

‘நாடோடிகள் 2 ‘ படத்திற்குப் பிறகு திருநங்கைகள் மீது பெரிய மரியாதை வரும்: நடிகர் சசிகுமார் நம்பிக்கை! !

நாடோடிகள் 2 திரைப்படத்திற்குப் பிறகு திருநங்கைகள் மீது பெரிய மரியாதை வரும் என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார். 

நாடோடிகள் 2 திரைப்படத்திற்குப் பிறகு திருநங்கைகள் மீது பெரிய மரியாதை வரும் என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழில் கடந்த  2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நாடோடிகள்’. நண்பனின் காதலுக்காக உயிரையே பணயம் வைக்கும் நண்பர்கள்,  காதல், தோல்வி, ஏமாற்றம்,  வலி என உணர்வுப் பூர்வமான கதையை இயக்கி வெற்றி கண்டார் இயக்குநர் சமுத்திரக்கனி.

nadodigal

பின்பு 11 வருடங்களுக்கும் கழித்து  இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘நாடோடிகள் 2 ‘ எடுக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இதில் அதுல்யா ரவி, பரணி, நமோ நாராயணா, ஞானசம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

sasi

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகரும் இயக்குநருமான  சசிகுமார், சமுத்திரக்கனி சமூக சிந்தனை உள்ள இயக்குநர். ‘நாடோடிகள் 2′ படத்தில் சமூகம் சார்ந்த விஷயத்தை வைத்திருக்கிறார். இதில் நமீதா என்கிற திருநங்கை வழியாக அவர்களுடைய வேதனையைப் பதிவு செய்திருக்கிறார். இந்த சமூகம் திருநங்கைகளை ஒதுக்கி வைத்திருக்கிறது. அவர்களுக்கும் உணர்வு இருக்கிறது என்பதை இந்த சமூகம் உணரவேண்டும். இந்த படத்துக்குப் பிறகு திருநங்கைகள் மீது பெரிய மரியாதை வரும்’ என்றார். 

samuthirakani

தொடர்ந்து பேசிய இயக்குநர் சமுத்திரக்கனி, ‘ஆண் பால், பெண் பால் தாண்டி, மூன்றாம் பால் இனத்தவர் படும் அவஸ்தையை ‘நாடோடிகள் 2′ படத்தில் நமீதா என்கிற திருநங்கை கதாபாத்திரம் வழியாகச் சொல்லியிருக்கிறேன்’ என்றார்.