நாடாளுமன்ற கூட்டத்தொடர் அமைதியாக நடைப்பெற ஒத்துழைக்க வேண்டும்… சபாநாயகர் பிர்லா!

 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் அமைதியாக நடைப்பெற ஒத்துழைக்க வேண்டும்… சபாநாயகர் பிர்லா!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி உட்பட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்துக் கொண்ட இந்த கூட்டம் முடிந்ததும், சபாநாயகர் ஓம் பிர்லா நிருபர்களிடம் பேசினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி உட்பட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்துக் கொண்ட இந்த கூட்டம் முடிந்ததும், சபாநாயகர் ஓம் பிர்லா நிருபர்களிடம் பேசினார்.

om brilla

அப்போது, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் அமைதியாக நடைப்பெற அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். மேலும், கட்சிகள், மக்கள் நலனுக்கான பிரச்சினைகளை எழுப்பும் என நம்புவதாகவும், எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு கோரிக்கைகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.