நாடாளுமன்றம் வந்த வைகோவை ஓடிச்சென்று வாழ்த்தினேன் – சுப்பிரமணியன் சுவாமி!
23 ஆண்டுகளுக்கு பின் நாடாளுமன்றம் சென்ற வைகோ நாடாளுமன்ற வளாகத்தில் சுப்ரமணியன் சுவாமியை சந்தித்து பேசினார்.
தேசத் துரோக குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை எம்.பி ஆக்க அனுமதிக்கக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். வைகோ நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துவந்த சுப்பிரமணியன் சுவாமி நாடாளுமன்றம் சென்ற வைகோவை சந்தித்து பேசினார்.
I ran into Vaiko in the corridors of Parliament today. Greeted and wished him well. He too told the media some complimentary views about me. Shishtachaar is essential in a democracy. Constitution is sacred
— Subramanian Swamy (@Swamy39) July 22, 2019
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, “வைகோவை நாடாளுமன்றத்தில் பார்த்ததும் ஓடிச்சென்று வாழ்த்து தெரிவித்தேன். வைகோவும் என்னைப் பற்றி பத்திரிக்கையாளரிடம் புகழ்ந்து கூறினார். பண்பாடு என்பது ஜனநாயகத்திற்கு அவசியமானது. இந்திய அரசியலமைப்பு சட்டம் புனிதமானது” என்று கூறினார்.