நாடாளுமன்றத்தில் தனி அறை! – மகிழ்ச்சியில் தி.மு.க எம்.பி-க்கள்!

 

நாடாளுமன்றத்தில் தனி அறை! – மகிழ்ச்சியில் தி.மு.க எம்.பி-க்கள்!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.அதற்கு மாநிலங்களவையிலும் குறிப்பிட்ட அளவு எம்.பி-க்கள் இருந்ததால் நாடாளுமன்றத்தின் கீழ்த் தளத்தில் அதற்கு மிகப்பெரிய அறை ஒதுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க பயன்படுத்திவந்த அறை தற்போது தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் புதிய அறையில் தி.மு.க எம்.பி-க்கள் ஒன்று கூடி விவாதித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.அதற்கு மாநிலங்களவையிலும் குறிப்பிட்ட அளவு எம்.பி-க்கள் இருந்ததால் நாடாளுமன்றத்தின் கீழ்த் தளத்தில் அதற்கு மிகப்பெரிய அறை ஒதுக்கப்பட்டது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றது.இதனால்,அந்த அறை தற்போது அதிக எம்.பி-க்கள் உள்ள தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

mp

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில் அந்த அறை தி.மு.க-விடம் ஒப்படைக்கப்பட்டது.தி.மு.க எம்.பி-க்கள் அனைவரும் அந்த அறைக்கு வந்து ஆலோசனை நடத்தினர்.இந்த காட்சிகளை அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு மகிழ்ந்தனர்.இந்த படங்களை தி.மு.க தொண்டர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.