‘நாங்க கோழை இல்லை.. திமுக கத்தியோடு வந்தால் நாங்கள் துப்பாக்கியோடு வருவோம்’ : அமைச்சர் ஜெயக்குமார்

 

‘நாங்க கோழை இல்லை.. திமுக கத்தியோடு வந்தால் நாங்கள் துப்பாக்கியோடு வருவோம்’ : அமைச்சர் ஜெயக்குமார்

கத்திரிக்கா முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே தீர வேண்டும் ஆனால், யார் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை என்றைக்கும் மிஞ்ச முடியாது

சென்னை தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், ‘ரஜினி கட்சி ஆரம்பிப்பது சந்தேகம் தான். ரஜினியை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வர வேண்டும் என்று கராத்தே தியாகராஜன், தமிழருவி உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். கத்திரிக்கா முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே தீர வேண்டும் ஆனால், யார் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை என்றைக்கும் மிஞ்ச முடியாது’ என்று தெரிவித்தார். 

ttn

அதனைத் தொடர்ந்து, ‘வரும் சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் திமுக வெறும் தி.க ஆகிவிடும். அதனால் தான் தேர்தலைத் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் தலையில் கொட்டு தான் விழுந்தது. எங்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாங்கள் கோழை இல்லை. அவர்கள் கத்தியோடு வந்தால் நாங்கள் துப்பாக்கியோடு வருவோம்’ என்று தெரிவித்தார். மேலும், ‘மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தால் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று கூறியதால் தான் நாங்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தோம்’ என்று தெரிவித்தார்.