நாங்கள் பயப்படவில்லை, எதற்கும் தயாராகவுள்ளோம்: அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்!

 

நாங்கள் பயப்படவில்லை, எதற்கும் தயாராகவுள்ளோம்: அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்!

மழைக் காலத்தை காரணம் காட்டி இடைத்தேர்தலை ஒத்திவைக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் முடிவு என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை: மழைக் காலத்தை காரணம் காட்டி இடைத்தேர்தலை ஒத்திவைக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் முடிவு என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கனமழை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக் கட்டி, இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் எனத் தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டதால், திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்று  தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரை முனிச்சாலையில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமைப் பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ‘அதிமுக எந்தத் தேர்தலை கண்டும் பயப்படவில்லை தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அதிமுக களத்தில் பணியைத் துவக்கிவிட்டோம்.  மழைக் காலத்தை காரணம் காட்டி இடைத்தேர்தலை ஒத்திவைக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் முடிவு.  அதற்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல தமிழகத்தில் எந்தத் தேர்தலையும் அதிமுக எதிர்கொள்ளத் தயாராக உள்ளது’ ‘ என்று விளக்கமளித்துள்ளார்.