நாகப்பாம்பின் பின்புறத்தில் தோன்றிய காட்சி.. வைரலாகும் பகீர் புகைப்படம்

 

நாகப்பாம்பின் பின்புறத்தில் தோன்றிய காட்சி.. வைரலாகும் பகீர் புகைப்படம்

படமெடுத்துக் கொண்டிருந்த நாகப் பாம்பின் பின்புறத்தில் சிகப்பு நிற வெளிச்சம் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொப்பா: படமெடுத்துக் கொண்டிருந்த நாகப் பாம்பின் பின்புறத்தில் சிகப்பு நிற வெளிச்சம் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் கொப்பா தாலுகா ஹலேமக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் நேற்று வழக்கம்போல் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென அவரது நாய் குரைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அங்கு அவினாஷ் சென்று பார்த்த போது, நாகப்பாம்பு ஒன்று நாய் முன் படம் எடுத்தபடி நின்றுள்ளது. 

அந்த பாம்பின் பின்புறத்தில் சிகப்பு நிற வெளிச்சம் ஒன்று தோன்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவினாஷ், பாம்பு படமெடுக்கும் காட்சியை புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், இது தொடர்பாக விரைவில் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க இருப்பதாகவும் அவினாஷ் தெரிவித்துள்ளார்.