நவீன அமுத சுரபி – பசியில்லா நெல்லை!

 

நவீன அமுத சுரபி – பசியில்லா நெல்லை!

முதல்முயற்சி பெருவெற்றிப்பெறவே, மேலப்பாளையம் பஜார் திடலில் 2வது உணவு பெட்டகமும் திறந்துள்ளனர். விரைவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உணவு பெட்டகங்களைத் திறக்கவும் ‘பசியில்லா நெல்லை’ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

ஆதரவற்றோர், முதியோர்களுக்கு உணவளித்து பசியாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது “பசியில்லா நெல்லை” என்ற தன்னார்வல‌ அமைப்பு. தொழிலதிபர் முகமது ரியாஸ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மகாராஜா நகரில், பசியால் வாடுவோர் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக உணவுப் பொருட்கள் பெற்றுச்செல்லும் வகையில் உணவுப் பெட்டகம் ஒன்றைத் திறந்தனர்.

Free Food for needy

முதல்முயற்சி பெருவெற்றிப்பெறவே, மேலப்பாளையம் பஜார் திடலில் 2வது உணவு பெட்டகமும் திறந்துள்ளனர். விரைவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உணவு பெட்டகங்களைத் திறக்கவும் ‘பசியில்லா நெல்லை’ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். சிலப்பதிகார மணிமேகலையின் அமுத சுரபியின் நவீன வடிவமாக ரியாஸ் மற்றும் அவரது நண்பர்களின் இந்த முயற்சியைப் பார்க்கலாம்.