நவகிரகங்களை முறையாக வழிபடுவது எப்படி? பலன்கள் என்ன?

 

நவகிரகங்களை முறையாக வழிபடுவது எப்படி? பலன்கள் என்ன?

கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பலருக்கும், நவகிரகங்களை எப்படி வழிபடுவது என்ற சந்தேகம் ஏற்படுவது வழக்கம் தான்.

கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பலருக்கும், நவகிரகங்களை எப்படி வழிபடுவது என்ற சந்தேகம் ஏற்படுவது வழக்கம் தான். சுற்றி வரும் போது, ஒரு சுற்றா, ஒன்பது சுற்றா? ஒன்பது சுற்றுகளுமே ஒரே திசையிலா? அல்லது இரண்டு சுற்று வேறு திசையிலா என்று பெரும் குழப்பமே இருக்கும். 
நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. ஆனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்டு கடைசியாக நவக்கிரகங்களை சுற்றி வருவது தான் சரியான முறையாகும். 

நவகிரகங்கள்

எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது. எந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.  சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும். சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும். செவ்வாயை (அங்காரகன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும். புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும். அறிவாற்றல் பெருகும்.

நவகிரகங்கள்

குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும். சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமைந்து வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம் பெறும். ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும். கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும். மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும் போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

நவகிரகங்கள்

பலன் தரும் பாடல்
திருஞானசம்பந்தரின் ‘கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்..
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
இந்தப் பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.