நள்ளிரவில் அத்திவரதரை தரிசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

 

நள்ளிரவில் அத்திவரதரை தரிசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

காஞ்சிபுரம் அத்தி வரதரை  நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் வந்து  வழிபட்டுச் சென்றுள்ளார். 

நள்ளிரவில் அத்திவரதரை தரிசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அத்தி வரதரை  நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் வந்து  வழிபட்டுச் சென்றுள்ளார். 

athivaradhar

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அத்தி வரதர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். அத்தி வரதர் வரும் 16 ஆம் தேதி வரையிலேயே பக்தர்களுக்குக் காட்சியளிக்கவுள்ள நிலையில் 17 ஆம் தேதி அவர் மீண்டும் குளத்தில் இறக்கப்படவுள்ளார். 

இந்நிலையில்  காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலிலுள்ள அத்தி  வரதரைத் தரிசிக்க நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன்   நள்ளிரவு பன்னிரண்டரை மணியளவில்  வருகை புரிந்தார். இதனால் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. பின்பு குடும்பத்துடன் அத்தி வரதரை  வழிபட்ட அவர், சில நிமிடங்கள் அமர்ந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு மரியாதை செய்யப்பட்டது. 

ரஜினியின் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோவிலின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் இருந்த பக்தர்கள் ரஜினியைப் பார்த்ததும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். 

 

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு லதா ரஜினிகாந்த் சயனகோலத்தில் காட்சியளித்த அத்தி வரதரை தனது  மகள்கள் மற்றும் உறவினர்களுடன் நள்ளிரவில் வந்து வழிபட்டுவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.