நல்ல ஆரோக்கியமும், மனநிம்மதியும் கிட்டட்டும்: நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

 

நல்ல ஆரோக்கியமும், மனநிம்மதியும் கிட்டட்டும்: நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

நல்ல ஆரோக்கியமும், மனநிம்மதியும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை: நல்ல ஆரோக்கியமும், மனநிம்மதியும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தை திங்கள் முதல் நாளான இன்று, அறுவடைத் திருநாளை முன்னிட்டு, சூரிய பகவானுக்கு, விவசாயிகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி கொண்டாடுகின்றனர். இந்த நாளில், தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் புத்தாடை அணிந்து புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு வழிபாடு செய்து பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.