நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 2 பேருக்கு கொரோனா…. தனிமைப்படுத்திக்கொண்டார் எம்.எல்.ஏ!!

 

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 2 பேருக்கு கொரோனா…. தனிமைப்படுத்திக்கொண்டார் எம்.எல்.ஏ!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவரும் போதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 56 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கரோனாவால் பாதிக்கப்படவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 

kpp baskar

இந்நிலையில் நாமக்கல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 15ஆம் தேதி மோகனூரில் இவர் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றன.