நரம்புகளை பலப்படுத்தும் சோற்றுக் கற்றாழை லேகியம்!

 

நரம்புகளை பலப்படுத்தும் சோற்றுக் கற்றாழை லேகியம்!

தேவையான பொருட்கள் :
சோற்றுக்கற்றாழை – 200 கிராம்‌
பாதாம்‌ – 100 கிராம்‌
முந்திரி – 100 கிராம்‌
பிஸ்தா – 100 கிராம்‌
கசகசா – 100 கிராம்‌
கற்கண்டு – 200 கிராம்‌
நெய்‌ – 250 கிராம்‌
பசும்பால்‌ – 1/2 லிட்டர்‌

தேவையான பொருட்கள் :
சோற்றுக்கற்றாழை – 200 கிராம்‌
பாதாம்‌ – 100 கிராம்‌
முந்திரி – 100 கிராம்‌
பிஸ்தா – 100 கிராம்‌
கசகசா – 100 கிராம்‌
கற்கண்டு – 200 கிராம்‌
நெய்‌ – 250 கிராம்‌
பசும்பால்‌ – 1/2 லிட்டர்‌

aloe vera

செய்முறை :
சோற்று கற்றாழையை தோல்‌ நீக்கி நன்றாக கழுவி அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்‌. பாதாம்‌, முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை தனித்தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்‌. பிறகு ஒரு சட்டியில்‌ பாலை ஊற்றி 15 நிமிடங்கள்‌ நன்றாக காய்ச்ச வேண்டும்‌. பிறகு கற்கண்டை போட்டு கிளறி கரைந்தவுடன்‌ அரைத்து வைத்துள்ள சோற்றுக்கற்றாழை, பாதாம்‌, முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறி விட வேண்டும்‌. பிறகு நெய்‌ ஊற்றி 40 நிமிடங்கள்‌ வரை கிளறவும்‌.நெய்‌ பிரிந்து  லேகியம்‌ பக்குவம் வரும் போது  இறக்கிவிடவும்‌.
நன்றாக ஆறியவுடன்‌  கண்ணாடி பாட்டிலில்‌ அடைத்து வைத்து தினமும்‌ சிறியவர்களுக்கு அரை ஸ்பூன்‌, பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூன்‌ அளவு சாப்பிட்டு வரலாம்‌. நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்துபவர்கள்‌ ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்‌.
உடலுக்கு நல்ல வலிமையை தரும்‌. உடல்‌ சூட்டை தனித்து குளிர்ச்சி உண்டாக்கும் தன்மையைக் கொண்டது‌ .அனைத்து மூல நோய்களும்‌ தீரும்‌. நரம்பு தளர்ச்சி குணமாகும்‌. மெலிந்த உடல்‌ பலம்‌ பெறும்‌. ஆண்மை குறைவினால்‌ ஏற்படும்‌ குழந்தையின்மை கோளாறு நீங்கி குழந்தை பேறு உண்டாகும்‌. வெட்டை நோய்‌ குணமாகும்‌. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.