நயன்தாரா- விக்னேஷ் சிவன் இடையே மோதல்? எதுக்கு தெரியுமா? 

 

நயன்தாரா- விக்னேஷ் சிவன் இடையே மோதல்? எதுக்கு தெரியுமா? 

விக்னேஷ் சிவன்- நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: விக்னேஷ் சிவன்- நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். நயன்தாரா தனது காதலருடன் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று தனது விடுமுறையை கழித்து வருகிறார். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களைத் தவறாமல் விக்னேஷ் சிவன் பதிவு செய்து வருகிறார். 

vignesh shivan

அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் சீக்கிரமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா தனது மாமியாரைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவு செய்துத்திருந்தார். 

vignesh shivan

இந்நிலையில் விக்னேஷ் சிவன் வீட்டில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஊர் சுற்றிவருவது பிடிக்காமல், திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிவருகின்றனர். ஆனால் நயன்தாரா பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இப்போது திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். 

நயன்தாரா

இதனால் நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவன் வீட்டிற்கு சின்ன பிரச்சினைகள் வந்துள்ளதாகவும், இப்படியே பிரச்சினை நீடித்தால் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று செய்தி பரவ ஆரம்பித்துள்ளது.