நம்பிக்கையிழந்த டி.டி.வி.தினகரன்… விம்மி வெடிக்கும் அமமுக நிர்வாகிகள்..!

 

நம்பிக்கையிழந்த டி.டி.வி.தினகரன்… விம்மி வெடிக்கும் அமமுக நிர்வாகிகள்..!

‘அவரு கொடுத்த பணத்தை எல்லாம் நாங்க, மக்களுக்கு கொடுத்துட்டோம். வாங்கிட்டு அவங்க ஓட்டு போடாததற்கு நாங்க என்ன செய்வோம்?’’ என்று விம்மி வெடிக்கிறார்கள் அமமுகவினர்.

டி.டி.வி.தினகரன் அணியினர் நடத்தும் அதிரடி ஆய்வால் அக்கட்சி நிர்வாகிகள்  அரண்டு ஓடுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்ததுக்கு பிறகு, தோற்ற கட்சிகள் எல்லாம் அதற்கான காரணத்தை ஆய்வு செய்த்கு கொண்டு இருக்கிறது. இதில் சேலம் மாவட்ட டி.டி.வி கட்சி நிர்வாகியின் ஆய்வால் அக்கட்சியினர் அரண்டு  ஓடுகிறார்கள். ttv 

ஒவ்வொரு பகுதிக்கும் போகும் மாநகர நிர்வாகி, ஆய்வுக்கூட்டம் என்று கட்சிக்காரர்களை கூப்பிடுகிறார்கள்.  ’’உங்க கிட்ட கொடுத்த பணத்தை என்ன செஞ்சீங்க? நம்ம கட்சி வாங்கியிருக்கிற ஓட்டை பார்த்தாலே, நீங்க பணத்தை  சரியா யாருக்கும் கொடுக்கலை என்பது தெரியுது’’ என்று கூறி வறுத்தெடுக்கிறார்கள். அதற்கும் ஒரு படி மேலே சென்று ’’நீங்களும், உங்க குடும்பமும் சத்தியமா கிப்ட் பாக்சுக்கு தான் ஓட்டுப்போட்டீங்களா? சத்தியம் செய்யுங்க பார்க்கலாம்’’  என்று கேட்பதால் கட்சிக்காரர்கள் மிரண்டு தவிக்கிறார்கள். ttv

 இதனால், பெரும்பாலான கட்சிக்காரர்கள், தற்போது நிர்வாகிகள் போன் செய்தாலே எடுக்காமல் சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார்கள்.  ‘அவரு கொடுத்த பணத்தை எல்லாம் நாங்க, மக்களுக்கு  கொடுத்துட்டோம். வாங்கிட்டு அவங்க ஓட்டு போடாததற்கு நாங்க என்ன செய்வோம்?’’ என்று விம்மி வெடிக்கிறார்கள் அமமுகவினர்.