நமக்குள்ள போட்டி இருக்கு தனுஷ்..!: ‘வடசென்னை’ குழுவுக்கு சிம்பு வாழ்த்து!

 

நமக்குள்ள போட்டி இருக்கு தனுஷ்..!: ‘வடசென்னை’ குழுவுக்கு சிம்பு வாழ்த்து!

தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘வடசென்னை’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைய நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘வடசென்னை’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைய நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ திரைப்படம் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்க்கையும், அவர்களது கேங்க் வார் குறித்தும் உருவாக்கப்பட்டுள்ளது. இது மூன்று பாகங்களாக வெளியாகும் என்று தெரிவித்திருந்த நிலையில், முதல் பாகம் இன்று முதல் உலகமெங்கும் ரிலீசாகியுள்ளது.

இப்படத்தின் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் படக்குழுவுக்கு என் மற்றும் எனது ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள். திரையில் நமக்கு இடையே போட்டி இருக்கும் ஆனால் சோஷியல் மீடியாவில் இல்லை. உங்களின் நல்ல படங்களை ஆதரிக்குமாறு என் ரசிகர்களிடமும், என்னை பின் தொடர்பவர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்’ என சிம்பு தெரிவித்துள்ளார்.

str

கடந்த சில ஆண்டுகளாகவே சிம்பு பட ரிலீசுக்கு தனுஷும், தனுஷ் பட ரிலீசுக்கு சிம்புவும் வாழ்த்துக் கூறிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அவர்கள் நண்பர்கள் என்று கூறிய போதிலும், அவர்களது ரசிகர்கள் எப்போதும் எலியும், பூனையுமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தனது ரசிகர்கள் தனுஷ் படத்தை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்துள்ள சிம்பு ரசிகர்களையும், தனுஷ் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

simbu

முன்னதாக ‘வடசென்னை’ திரைப்படம் சிம்புவுக்காக உருவாக்கப்பட்டதாகௌம், சில காரணங்களால் அவர் நடிக்காததால் அந்த வாய்ப்பு தனுஷுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.