நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை: கொலையில் முடிந்த வாய்தகராறு!

 

நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை: கொலையில் முடிந்த வாய்தகராறு!

கொரோனா காரணமாக பெரும்பாலான மக்கள்  வீடுகளில் முடங்கியுள்ளனர். அதே சமயம் குற்ற சம்பவங்களும் இந்த நேரத்தில் அதிகரித்து வருகிறது. 

கொரோனா காரணமாக பெரும்பாலான மக்கள்  வீடுகளில் முடங்கியுள்ளனர். அதே சமயம் குற்ற சம்பவங்களும் இந்த நேரத்தில் அதிகரித்து வருகிறது. 

tt

அந்த வகையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த கார் ஓட்டுநர்  வினோத். 23 வயதான இவர் நேற்று இரவு நண்பர் ஜெனிஸ்டன் பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே   இருவரும் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

tt

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதில் வினோத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது நண்பர் ஜெனிஸ்டனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.