நண்பனின் மனைவி மீது ஏற்பட்ட விபரீத ஆசை: நம்பி வந்த நண்பனை தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்த பயங்கரம்!

 

நண்பனின் மனைவி மீது ஏற்பட்ட விபரீத ஆசை: நம்பி வந்த நண்பனை தண்டவாளத்தில் தள்ளி  கொலை செய்த பயங்கரம்!

நண்பனின் மனைவி மீது இருந்த காதலால் ஒருவர், நண்பனை ரயில் தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுடெல்லி: நண்பனின் மனைவி மீது இருந்த காதலால் ஒருவர், நண்பனை ரயில் தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி ஸகிரா ரயில் நிலையத்துக்குக் கடந்த 24ஆம் தேதி  குல்கேஷ் என்பவர் அவரது நண்பர் தல்பீருடன் வந்துள்ளார். இருவரும் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று  குல்கேஷ் அங்கிருந்த செங்கல்லால்  தல்பீரைத் தாக்கியுள்ளார்.  இதில் தல்பீர் மயக்கி விழ அவரை தூக்கி தண்டவாளத்தில் வீசியுள்ளார். இதையடுத்து  ரயிலில் அடிபட்டு தல்பீர் இறந்துள்ளார்.

murder

இதையடுத்து நண்பன் இறப்பதைக் கண்ணெதிரே கண்ட குல்கேஷ், தண்டவாளத்தில் ஒருவர் உடல்சிதறி இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு போனில் தகவல் கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,  இது தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர். அதில் தல்பீரின் செல்போனை ஆய்வு செய்த போலீஸார் அவர் கடைசியாக குல்கேஷுடன் பேசியிருந்ததைக்  கண்டுபிடித்தனர். இதையடுத்து வழக்கை திசை திருப்பவே குல்கேஷ்  போலீசுக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குல்கேஷை  கைது செய்தனர்.

arrested

அவரிடம் நடத்திய விசாரணையில் ‘தன்னுடைய நண்பரான தல்பீரின் மனைவி மீது எனக்கு காதல் வந்தது.  தல்பீரின் மனைவிக்கும் என்னை பிடிக்கும். ஆனால் அவர் என்னை  திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதனால் அதற்கு தடையாக உள்ள நண்பன் தல்பீரை  கொலை செய்துவிட்டு அவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.மேலும் இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.