நடைப்பயிற்சியின் போது கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றிய மோடி: வைரல் வீடியோ!
பிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் நடைப்பயிற்சியின் போது, அங்கிருந்த குப்பைகளை அகற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் நடைப்பயிற்சியின் போது, அங்கிருந்த குப்பைகளை அகற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாமல்லபுரத்தில் சீன அதிபர் – பிரதமர் மோடியின் சந்திப்பு நடந்தேறி வருகிறது. இரண்டு நாட்கள் பயணமான இது இன்றுடன் முடிகிறது. நேற்றைய நிகழ்வில் இரு நாடு தலைவர்களும் மாமல்லபுரத்தின் புராதான சின்னங்களைப் பார்வையிட்டனர். இதையடுத்து சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று கோவளம் வருகை தருகிறார். இதற்காக கோவளத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரதமர் மோடி தங்கியுள்ளார்.
முன்னதாக காலை கோவளம் கடற்கரையில் நடைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த குப்பைகளை கைகளால் எடுத்து, பின்னர் அதை ஒன்றாக சேர்த்து அங்கிருந்த ஓட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார்.
Plogging at a beach in Mamallapuram this morning. It lasted for over 30 minutes.
Also handed over my ‘collection’ to Jeyaraj, who is a part of the hotel staff.
Let us ensure our public places are clean and tidy!
Let us also ensure we remain fit and healthy. pic.twitter.com/qBHLTxtM9y
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
சுமார் 30 நிமிடங்கள் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மோடி இதுகுறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோடி, பொதுஇடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள உறுதியேற்போம்’ என்று பதிவிட்டுள்ளார். மோடியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.