நடிகை நிக்கி கல்ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா நடிகர் ஜீவா? வெளியான உண்மை!

 

நடிகை நிக்கி கல்ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா நடிகர் ஜீவா? வெளியான உண்மை!

பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு நடிகர் ஜீவா பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான செய்தியை  நிக்கி கல்ராணி மறுத்துள்ளார்.

சென்னை: பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு நடிகர் ஜீவா பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான செய்தியை  நிக்கி கல்ராணி மறுத்துள்ளார்.

இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

nikil

இந்த படத்தில் முதன் முதலில் நிக்கி கல்ராணி தான் நடிக்க இருப்பதாக இருந்தது பின்னர் அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணமே ஜீவாவுடன் ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்த போது நிக்கி கல்ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பலரும் சமூக வலைதளத்தில் கூறி வந்தனர்.

nikil

இந்நிலையில் இதற்கு நிக்கி கல்ராணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘நடிகர் ஜீவா எனது சிறந்த நண்பர், கொரில்லா படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. சில வேலை இல்லாத நபர்கள் இது போன்ற பொய்யான செய்திகளை பரப்பி விடுகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.