நடிகை ஜெயபாரதி வீட்டில் 31 சவரன் நகை கொள்ளை: 3 மணிநேரத்தில் திருடர்களை பிடித்த போலீசார்!

 

நடிகை ஜெயபாரதி வீட்டில் 31 சவரன் நகை கொள்ளை: 3 மணிநேரத்தில் திருடர்களை பிடித்த போலீசார்!

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் அவென்யூவில் நடிகை ஜெயபாரதிக்கு சொந்தமான வீடு உள்ளது. அங்குள்ள பீரோவில் ஜெயபாரதி 31 சவரன் நகைகளை வைத்துள்ளார். இந்த நகைகளை கடந்த  5 ஆம் தேதி மாலை எடுக்க  பீரோவை பார்த்தபோது, நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார்.

ttn

அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில்  ஜெயபாரதியின் வீட்டியில் பணி புரிந்த தற்காலிக கார் ஓட்டுநரான  பாலக்காட்டைச் சேர்ந்த  இப்ராகிம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த காவலாளி பகதூர் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. 

ttn

இதையடுத்து  திருடிய மூன்று மணிநேரத்தில்  நகைகளை மீட்ட போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் இன்று திருடர்கள் குறித்தும், நகைகளையும் அவர்கள் காட்சிப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.