நடிகர் விஜய் ரசிகர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்த காமெடி நடிகர் கருணாகரன்…
நடிகர் விஜய் ரசிகர்களுடன் ‘சர்கார்’ படம் ரிலீஸான சமயத்தில் உண்டான பழைய பஞ்சாயத்து தேர்தல் நாளன்று முடித்து வைத்து நிம்மதி மோடுக்கு வந்திருக்கிறார் காமெடி நடிகர் கருணாகரன்.
நடிகர் விஜய் ரசிகர்களுடன் ‘சர்கார்’ படம் ரிலீஸான சமயத்தில் உண்டான பழைய பஞ்சாயத்து தேர்தல் நாளன்று முடித்து வைத்து நிம்மதி மோடுக்கு வந்திருக்கிறார் காமெடி நடிகர் கருணாகரன்.
தீவிர தி.மு.க ஆதரவாளரான காமெடி நடிகர் கருணாகரன் சமூக வலைதளமான ட்விட்டரில் விறுவிறுப்பாக இயங்கும் சில நடிகர்களில் ஒருவர். சினிமா சார்ந்த பதிவுகள் மட்டுமல்ல, அவ்வப்போது அரசியல் பதிவுகளையும் அவர் பதிவு செய்வார். இதனால் கடும் கண்டன கமெண்டுகளையும் தொடர்ந்து சம்பாதித்து வந்தார்.
‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது சர்ச்சையானது. அவரது கருத்தை பலரும் விமர்சித்தனர். ஆனால் அதற்கு நடிகர் விஜய் எந்தப் பதில் கருத்தும் கூறவில்லை. இந்நிலையில் விஜய் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன், “குட்டிக்கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா? தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா” என்று ட்வீட் செய்திருந்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது.
அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கும் அவருக்கும் சமூகவலைத்தளத்தில் தொடர்ச்சியாக கருத்து மோதல்கள் ஏற்பட்டன. அனைத்துக்குமே சளைக்காமல் பதிலடி கொடுத்து வந்த அவரது தொலைபேசி எண்ணை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர, பலரும் அவரை அலைபேசியிலும் திட்டித் தீர்த்தார்கள். இச்சம்பவம் தொடரவே, சில மாதத்துக்கு முன்பு ட்விட்டர் தளத்திலிருந்தே விலகினார்.
இந்நிலையில், மீண்டும் ட்விட்டர் பக்கம் தயங்கித் தயங்கி எட்டிப்பார்த்த கருணாகரன் எவ்வித பஞ்சாயத்தையும் இழுக்காமல் அமைதிகாத்து வந்தார். நேற்று (ஏப்ரல் 18) வாக்களித்து விட்டு தனது புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 19) தனது ட்விட்டர் பதிவில், ‘‘நான் பொதுவாக யாரையும் வெறுப்பதில்லை. நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத் தக்க அந்த வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்கக் கூடாது.
I actually don’t hate any one .I feel sorry I should not have used that word hate @actorvijayAnna one of my favourite he knows ????I am sorry if I have hurt any one by words on social media… I mean it ?Sorry
— Karunakaran (@actorkaruna) April 19, 2019
அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். அவர் நான் விரும்பும் நடிகர், அவருக்கும் இது தெரியும். சமூகவலைத்த்தில் நான் பயன்படுத்திய எந்தவொரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.’’என்று சாஷ்டாங்கமாக விஜய் ரசிகர்கள் காலில் விழுந்தார். இனி விஜய் ரசிகர்கள் அவரை மன்னித்து அருள்வார்கள் என்று நம்பலாம்.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் கோரிக்கைக்கு தலை சாய்த்த தேர்தல் ஆணையம்…ரசிகர்கள் மகிழ்ச்சி!