நடிகர் விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பவன்…வைரல் வீடியோ!
அசுரன் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாகத் திரையில் ஓடியதற்காகச் சென்னை ரஷ்யன் கல்சரில் அசுரன் படக்குழுவினர் 100-வது நாள் வெற்றிவிழாவைக் கொண்டாடினர்.
வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.இதையடுத்து அசுரன் படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
இதையடுத்து அசுரன் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாகத் திரையில் ஓடியதற்காகச் சென்னை ரஷ்யன் கல்சரில் அசுரன் படக்குழுவினர் 100-வது நாள் வெற்றிவிழாவைக் கொண்டாடினர்.
இவ்விழாவுக்காக தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் வருகை புரிந்தனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பவன், ‘ 100 நாட்கள் படம் ஓடுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது . கடைசியாக குருவி படத்தின் 150 ஆவது நாள் வெற்றி விழாவுக்காக சென்றேன். அது எந்தளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது என்றார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் சிரிக்க, மேடையிலிருந்த தனுஷ், சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டார்.
இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னிப்பு விடியோ #ThalapathyVijay
Actor #Pawan asked sorry to #thalapathy for immature speech #MasterSecondLook #Master
— Tʀᴇɴᴅs Tʜᴀʟᴀᴘᴀᴛʜʏ ™ (@superstarboyss2) January 14, 2020
இந்நிலையில் நடிகர் பவன் இணையதள ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘நான் விஜய் சாரிடமும் படத்தின் இயக்குநர், தயாரிப்பு நிறுவனத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் பேசியது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. பொதுவாக நான் நிகழ்ச்சிகளுக்குச் செல்லமாட்டேன், அப்படி சென்றால் என்னை மேடைக்கு அழைக்காதீர்கள் என்று சொல்லி விடுவேன்.. நான் தெரியாமல் பேசி விடுவேன்’ என்று கூறியுள்ளார்.