நடிகர் விக்ரமுடன் கூட்டணி சேரும் இர்ஃபான் பதான் : ஒப்புக்கொண்டதன் காரணம் இதுதானாம்!
இயக்குநர் அஜய் ஞானமுத்து என்வீட்டிற்கு வந்து என்னிடம் கதை சொன்னார். அப்போது நான் ஏன் நடிக்கணும் என்று கேட்டேன்
நடிகர் விக்ரமின் 58-வது படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் விக்ரம் நடிக்கும் 58-வது படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இவர் ஏற்கனவே டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர்.
இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள இர்ஃபான் பதான், ‘நான் சில ரியாலிட்டி ஷோக்களில் பங்குகொண்டுள்ளேன்.ஆனால் சினிமாவுக்கு நான் புதுசு. இயக்குநர் அஜய் ஞானமுத்து என்வீட்டிற்கு வந்து என்னிடம் கதை சொன்னார். அப்போது நான் ஏன் நடிக்கணும் என்று கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்று கூறினார். உடனே ஓகே சொல்லிவிட்டேன். விக்ரமுடன் நடிப்பது பெருமையான விஷயம். அவர் சிறந்த நடிகர். ஷூட்டிங்கில் சில ரீடேக்குகள் வாங்குவேன் என்று நினைக்கிறேன்’ என்றார்.
முன்னதாக நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.