நச்சுவிதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்ட ஐஐடி பேராசிரியை!: உண்மை நிலவரம் என்ன?

 

நச்சுவிதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்ட ஐஐடி பேராசிரியை!: உண்மை நிலவரம் என்ன?

சென்னை கோட்டூர்புரத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவர் நச்சுவிதையை அரைத்துக் குடித்து, தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : சென்னை கோட்டூர்புரத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவர் நச்சுவிதையை அரைத்துக் குடித்து, தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி-யில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் அதிதி சிம்ஹா. கணவரைப் பிரிந்த இவர், நேற்றிரவு நச்சுவிதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த உறவினர்கள், அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை உயிரிழந்தார்.

iit

இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த கோட்டூர்புரம் போலீசார், பேராசிரியர் அதிதி சிம்ஹாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.