த்ரிஷாவுடன் காதலா? மனம் திறக்கும் ‘பாகுபலி’ ராணா!

 

த்ரிஷாவுடன் காதலா? மனம் திறக்கும் ‘பாகுபலி’ ராணா!

‘பாகுபலி’ பிரபலமான நடிகர் ராணா, தமிழ் நடிகையான த்ரிஷாவுடனான காதல் குறித்து பாலிவுட் டாக் ஷோவில் மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னை: ‘பாகுபலி’ பிரபலமான நடிகர் ராணா, தமிழ் நடிகையான த்ரிஷாவுடனான காதல் குறித்து பாலிவுட் டாக் ஷோவில் மனம் திறந்து பேசியுள்ளார்.

பாலிவுட்டில் பிரபலமான இயக்குநர் கரண் ஜோஹரின் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ‘பாகுபலி’ படக்குழுவைச் சேர்ந்த இயக்குநர் ராஜமௌலி, பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ராணா, பிரபாஸிடம் ரிலேஷன்ஷிப் குறித்து கரண் ஜோஹரின் கேள்விக்கு இருவருமே தாங்கள் சிங்கிள் என பதிலளித்தனர்.

koffeewithkaran

பின்னர், ராணா-த்ரிஷா இடையேயான கிசுகிசு பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராணா, 10 ஆண்டுகளுக்கு மேலாக தானும் த்ரிஷாவும் நல்ல நண்பர்கள். சிறிது காலம் இருவரும் காதலித்தோம். பின்னர் எங்களுக்கு ஒத்துவராததால் பிரிந்துவிட்டோம். தற்போது இருவருமே நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்று ராணா பதிலளித்துள்ளார்.

trisha

ஏற்கனவே தமிழ்-தெலுங்கு சினிமாவில் ராணாவும், த்ரிஷாவும் காதலிப்பதாக கூறப்பட்ட தகவல் உண்மை தான் என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.