“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்…பேருந்தில் அவரோட இருக்கையில் யாரும் உட்கார மாட்டோம்!” – சஹல் உருக்கம்

 

“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்…பேருந்தில் அவரோட இருக்கையில் யாரும் உட்கார மாட்டோம்!” – சஹல் உருக்கம்

தோனியை இந்திய அணியினர் ரொம்ப மிஸ் செய்வதாக யுஸ்வேந்திர சஹல் கூறியுள்ளார்.

ஹாமில்டன்: தோனியை இந்திய அணியினர் ரொம்ப மிஸ் செய்வதாக யுஸ்வேந்திர சஹல் கூறியுள்ளார்.

நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டனில் நாளை நடக்கிறது. இதற்காக இந்திய அணியினர் பேருந்தில் பயணித்தனர். அப்போது சக வீரர்களுடன் சஹல் ஒரு வீடியோவை படம்பிடித்தார். கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோர் உடனிருந்தனர். அந்த வீடியோவின் முடிவில் பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்ற சஹல், கடந்தமுறை தோனி நியூசிலாந்து வந்தபோது இந்த இருக்கையில் தான் அமர்ந்தார் என்று பேருந்தில் ஒரு இருக்கையை காண்பித்தார். அந்த இருக்கை காலியாக இருந்தது. அதில் யாரும் உட்காரவில்லை.

ttn

இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் அந்த இருக்கையில் அமரவில்லை என்றும், அணி வீரர்கள் அனைவரும் தோனியை ரொம்ப மிஸ் பண்ணுவதாக சஹல் தெரிவித்தார். கடந்தாண்டு நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அவருக்கு தற்போது 38 வயது ஆகிறது. சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்ட வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இந்தக் காரணங்களால் தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதோ என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.