தோனிக்கு இந்த பொறுப்பு கிடையாது – பிசிசிஐ முடிவு!

 

தோனிக்கு இந்த பொறுப்பு கிடையாது – பிசிசிஐ முடிவு!

தோனிக்கு நிச்சயம் இந்தப் பொறுப்பை தற்போது கொடுக்க இயலாது என பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியா-வங்கதேசம் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டி இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்க இருப்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

தோனிக்கு நிச்சயம் இந்தப் பொறுப்பை தற்போது கொடுக்க இயலாது என பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியா-வங்கதேசம் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டி இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்க இருப்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

dhoni and ganguly

இந்த பகலிரவு ஆட்டத்திற்கான முடிவை பிசிசிஐ தலைவர் கங்குலி மிகவும் போராடி பெற்றுத் தந்திருக்கிறார். இதன்மூலம் டெஸ்ட் போட்டி குறித்த விழிப்புணர்வு ரசிகர்களிடையே அதிகரிக்கும். அதேபோல் தற்போது வந்து கொண்டிருப்பதை விட பார்வையாளர்கள் எண்ணிக்கை டெஸ்ட் போட்டிக்கு பல மடங்கு உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. 

இந்த போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரசிகர்களுக்கு மேலும் ஆவலை கூட்ட தோனியை வர்ணனையாளராக வரவழைக்க முடிவு செய்து பிசிசிஐ இடம் கோரிக்கை விடுத்தது. இதனை பரிசீலனை செய்த பிசிசிஐ தரப்பு தற்போது தோனியை வர்ணனையாளராக இருக்க வைக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதற்கான காரணத்தையும் பிசிசிஐ தரப்பு வெளியிட்டுள்ளது. 

dhoni

அதில், தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இன்னமும் பிசிசிஐ உடன் ஒப்பந்தத்தில் இருக்கிறார். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் ஒருவர் வர்ணனையாளராக செயல்பட இயலாது. அவ்வாறு செயல்பட்டால் அது இரட்டை பதவியாக கருத்தில் கொள்ளப்பட்டு ஏதேனும் ஒன்றிலிருந்து விலக்கப்பட நேரிடும். 

தோனி அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராக தொடரலாம். அதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனியை காணலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு, இது பெரும் அதிர்ச்சியாகவும், சோகத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.