தொழில் அதிபர் காதலை உதறித்தள்ளிய ரம்யா! ஓப்பனாக காரணத்தை அறிவித்த தாய் ரஞ்சிதா 

 

தொழில் அதிபர் காதலை உதறித்தள்ளிய ரம்யா! ஓப்பனாக காரணத்தை அறிவித்த தாய் ரஞ்சிதா 

சென்னை: தொழில் அதிபருடன் ரம்யாவுக்கு நடக்கவிருந்த திருமணம் நின்றுவிட்டதாக அவரது தயார் ரஞ்சிதா கூறியுள்ளார். 

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரம்யா. அதைத்தொடர்ந்து பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்த அவர் தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். படத்தில் நடித்த பிறகு மற்ற நடிகைகள் போல் இவருக்கும் அரசியல் மேல் ஆசை வர அப்படியே அரசியல் பக்கம் சென்று விட்டார்.  காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரம்யா, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மண்டியா நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு தலைவியாகச் செயல்பட்டார். 

அதைத்தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கம் மூலம் பா.ஜா.கவை டுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு ரம்யா எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்ற ஒன்றுமே தெரியவில்லை. 

இந்த நிலையில் இவருக்கும், போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலுக்கும் துபாயில் திருமணம் நடக்க உள்ளதாகத் தகவல்கள் பரவின. பின்பு திருமணம் பல்வேறு காரணமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது போன்று தொடர்ச்சியாக ரம்யா குறித்து வதந்தி  பரவியதால் அவரின் அம்மா ரஞ்சிதா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, ‘ரம்யாவுக்கு தற்போது திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. திருமணம் குறித்து அவர் முடிவு செய்தால் வெளிப்படையாக அறிவிப்போம். அவரின் திருமணத்தை ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதனால் அவரின் திருமணம் குறித்து யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். ரம்யா அரசியலில் கவனம் செலுத்திய போது, ரபேல் தனது தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் அவர்கள் அதிகமாகச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. மேலும் ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. ரபேலுக்கு போர்ச்சுக்கல் நாட்டை விட்டு வரவிருப்பில்லை. அதனால் 2 பேரும் ஒன்றாகப் பேசி முடிவுசெய்து தான் பிரிந்தனர். இருப்பினும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.