தொலைபேசியை ஒட்டுக் கேட்கவேண்டாம் என கூறிய மாணவருக்கு கத்திக்குத்து !! ஆட்டோ ஓட்டுநரின் அடாவடி !!

 

தொலைபேசியை ஒட்டுக் கேட்கவேண்டாம் என கூறிய மாணவருக்கு கத்திக்குத்து !! ஆட்டோ ஓட்டுநரின் அடாவடி !!

ஒரு தொலைபேசி அழைப்பின் போது “பிஹாரி”உச்சரிப்பில் சத்தமாக பேசுவது குறித்து மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு நபர் பத்திரிகை மாணவர் மற்றும் அவரது 22 வயது சகோதரரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

தொலைபேசியில் பேசும்போது ஏற்பட்ட தகராறில் இதழியில் மாணவர் மற்றும் அவரது சகோதரரை ஆட்டோ டிரைவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. 

ஒரு தொலைபேசி அழைப்பின் போது “பிஹாரி”உச்சரிப்பில் சத்தமாக பேசுவது குறித்து மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு நபர் பத்திரிகை மாணவர் மற்றும் அவரது 22 வயது சகோதரரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பண்டேபாலய காவல்துறை எல்லைக்குள் நடந்தது. ஒரு இதழியில் மாணவர் தனது பெற்றோருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இவரது பெற்றோர் பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.  அவரது தம்பி நர்சிங் படித்து வருகிறார். இதழியல் மாணவர் ஒரு கன்சல்ட்டன்டாகவும் இருந்து வருகிறார். 
இதழியில் மாணவர் தனது பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஆட்டோ ஓட்டுநர் மஞ்சுநாத் வால்மிகி அவர் அருகில் வந்துள்ளார். அதற்கு அந்த மாணவர் தான் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருப்பதால் அருகில் வரவேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் அவரை கழுத்தில் பிடித்து பலவந்தமாக தள்ளினார். மீண்டும் அந்த மாணவரை பலமறை ஆட்டோ ஓட்டுநர் தாக்கியுள்ளார். இந்த விஷயத்தை வீட்டு உரிமையாளரிடம் சொன்னார் மாணவர்.

murder-78.jpg

பின்னர் தனது சகோதரரிடம் இந்த சம்பவத்தை விவரித்தார். அவரது தம்பி, அபிஷேக்குடன், ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வால்மீகி ஒரு கத்தியை வெளியே இழுத்து, இரு சகோதரர்களையும் மார்பில் தாக்கினார். இதனால் இருவரும் பலத்த காயம் காயம் அடைந்தனர். இதனால் அந்த மாணவரின் நுரையீரலுக்குள் கத்தி நுழைந்தது. சகோதரனுக்கும் 7 செ.மீ ஆழத்தில் கத்தி சென்றது. விலா எலும்பு முறிந்துள்து. இரண்டு சகோதரர்களுக்கும் ஒரு மருத்துவமனையில் ஐந்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பண்டேபாலய காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது