தொலைதொடர்பு துறைக்கு மீண்டும் ரூ.8000 கோடி நிலுவை தொகையை செலுத்திய ஏர்டெல் நிறுவனம்

 

தொலைதொடர்பு துறைக்கு மீண்டும் ரூ.8000 கோடி நிலுவை தொகையை செலுத்திய ஏர்டெல் நிறுவனம்

பிரபல ஏர்டெல் நிறுவனம் மத்திய தொலைதொடர்பு துறைக்கு ரூ.8000 கோடி தொகையை நிலுவைத் தொகையாக செலுத்தியுள்ளது.

டெல்லி: பிரபல ஏர்டெல் நிறுவனம் மத்திய தொலைதொடர்பு துறைக்கு ரூ.8000 கோடி தொகையை நிலுவைத் தொகையாக செலுத்தியுள்ளது.

மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட 15 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளன. உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் இந்த நிலுவைத் தொகை பாக்கி உள்ளது. இந்த பாக்கித் தொகையை கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

ttn

இந்த நிலையில், மத்திய தொலைதொடர்பு துறைக்கு ஏர்டெல் வழங்க வேண்டிய நிலைவை தொகையில் ரூ.10,000 கோடியை கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் நிலுவைத் தொகை பாக்கி ரூ.35,586 கோடி ஆகும். இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மேலும் ரூ.8004 கோடியை இன்று தொலை தொடர்பு துறைக்கு கட்டியது. இதன் மூலம் அந்த நிறுவனம் இதுவரை மொத்தம் ரூ.18,004 கோடி நிலுவை தொகையை செலுத்தி இருக்கிறது. முன்னதாக மார்ச் 17-ஆம் தேதிக்குள் நிலுவை தொகை முழுவதையும் செலுத்தி விடுவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.