தொடர் மழை எதிரொலி: சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

தொடர் மழை எதிரொலி: சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தொடர் மழை பெய்து வருவதால் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை முதல் அவ்வப்போது லேசான காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.