தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பங்குச் சந்தைகள்! முதலீட்டாளர்கள் உற்சாகம்!

 

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பங்குச் சந்தைகள்! முதலீட்டாளர்கள் உற்சாகம்!

தொடர்ந்து 2 வர்த்தக தினங்களாக சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்தது. 

தொடர்ந்து 2 வர்த்தக தினங்களாக சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்தது. 

பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை குறைவாக இருந்ததால் முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கி குவித்தனர். பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக இருந்தது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்.டி.பி.சி., ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் யெஸ் பேங்க், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக்மகிந்திரா, இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 

மும்பை பங்குச் சந்தையில் இன்று பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,51,03,573.05 கோடியாக உயர்ந்து. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.84 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,50,19,285.26 கோடியாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,252 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளை 1,270 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 166 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 311.98 புள்ளிகள் உயர்ந்து 39,434.94 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 96.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,796.45 புள்ளிகளில் முடிவுற்றது.