தொடர் கனமழை: இன்று எங்கெல்லாம் விடுமுறை?

 

தொடர் கனமழை: இன்று எங்கெல்லாம் விடுமுறை?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை தடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்தது. இன்று காலையும் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே, அடுத்க்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, வேலூர், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் நிவாரண முகாம்கள் அமைந்துள்ள கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த சட்டப் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும், சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.