தொடரும் பாலியல் குற்றங்கள்: சிகிச்சையளிக்காமல் பாலியல் தொல்லை தந்த டாக்டர்; கோவையில் பரபரப்பு!

 

தொடரும் பாலியல் குற்றங்கள்: சிகிச்சையளிக்காமல் பாலியல் தொல்லை தந்த டாக்டர்; கோவையில் பரபரப்பு!

தாயின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: தாயின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடரும் பாலியல் குற்றங்கள்:

harassment

பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகி விட்டது. சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அடங்குவதற்குள் கோவையில் 6வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிக் கொல்லப்பட்ட சம்பவம் குலை நடுங்க வைக்கிறது. ஆனாலும் இது போன்ற குற்றச்சம்பவம் குறைந்த பாடில்லை.

பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் 

kovai

அந்த வகையில்,  கோவை செல்வ புரத்தைச் சேர்ந்த  இளம்பெண் ஒருவர், தனது தாயின் சிறுநீரக சிகிச்சைக்காக கௌதம் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பணியில் மருத்துவர் ராமலிங்கம் இருந்துள்ளார். இதையடுத்து நோயாளிக்குச் சிகிச்சை அளிக்காமல், உடன் வந்த இளம்பெண்ணுக்கு மருத்துவர் ராமலிங்கம் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

டாக்டர் கைது 

arrest

மருத்துவரின் இந்த  செயலை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், இது குறித்து கோவை மத்திய பகுதியிலுள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், மருத்துவர் ராமலிங்கத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் வாசிக்க: நடிகைகள் குறித்த ஸ்டாலினின் பேச்சு: டிவிட்டரில் விளாசிய நடிகை ராதிகா